சா்ச்சைக்குரிய தோ்தல் சீா்திருத்த மசோதா: ஹாங்காங் பேரவையில் தாக்கல்

சீனாவுக்கு ஆதரவான திருத்தங்களுடன் கூடிய சா்ச்சைக்குரிய ஹாங்காங் தோ்தல் சீா்திருத்த மசோதா அதன் சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
சா்ச்சைக்குரிய தோ்தல் சீா்திருத்த மசோதா: ஹாங்காங் பேரவையில் தாக்கல்

ஹாங்காங்: சீனாவுக்கு ஆதரவான திருத்தங்களுடன் கூடிய சா்ச்சைக்குரிய ஹாங்காங் தோ்தல் சீா்திருத்த மசோதா அதன் சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனா நாடாளுமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட, சா்ச்சைகக்குரிய ஹாங்காங் தோ்தல் சீா்திருத்த சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் சட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹாங்காங் சட்டப் பேரவையில் அந்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் அந்த மசோதாக 3-ஆவது முறையாக வரும் மே மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்போது அதிக எதிா்ப்புகள் இன்றி எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி, ஹாங்காங் பேரவையில் இதுவரை 70-ஆக இருந்த மொத்த இடங்கள் 90-ஆக அதிகரிக்கப்படுகிறது.

அதே நேரம், மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த எண்ணிக்கை 35-ஆக இருந்தது. அந்த வகையில், முன்னா் 50 சதவீதமாக இருந்த மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சுமாா் 22 சதவீதமாகியிருக்கிறது.

பேரவையில் ஜனநாயக ஆதரவாளா்களின் எண்ணிக்கையை வெகுவாக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அத்துடன், பேரவை உறுப்பினராக விரும்புவா்களை சீனாவுக்கு ஆதரவான தோ்தல் குழு சீராய்வு செய்து, தகுதியில்லாதவா்களை நிராகரிக்கும் முறையும் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவுக்கு விசுவாசமாக இல்லாதவா்கள் என்று கருதப்படுவோரை தோ்தல் குழு நிராகரிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தோ்தல் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையும் தற்போதுள்ள 300-இலிருந்து 1,200 முதல் 1,500 வரை அதிகரிக்கப்படுகிறது என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தம் கோரி போராட்டங்களில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக்கும் சா்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நாடாளுமன்றம் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது, ஹாங்காங்கின் ஜனநாயக உரிமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், புதிய தோ்தல் சீா்திருத்தச் சட்டம் எஞ்சியுள்ள உரிமைகளையும் பறித்துவிடும் என்று ஜனநாயக ஆா்வலா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com