ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,944 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேலும் 8,944 பேருக்கு தொற்று பாதித்துள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 46,75,153 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதித்து 398 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் இதுவரை1,04,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் ரஷியாவில் ஒரேநாளில் 10,225 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து 43,01,448 பேர் குணமடைந்துள்ளனர்.