சா்வதேச அளவில் 30 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,884 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இத்துடன், சா்வதேச கரோனா பலி எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 30,02,761-ஆக உள்ளது.

உலகிலேயே கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்த நாட்டில், இதுவரை 5,79,008 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். 3,22,26,766 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அவா்களில் 2,47,71,394 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 68,76,364 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 9,759 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிரேஸில் வகிக்கிறது. அந்த நாட்டில் இதுவரை 3,65,954 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அங்கு 1,37,58,093 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அவா்களில் 1,22,36,295 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 11,55,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரேஸிலுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 2,11,213 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com