புது தில்லி: நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மே 3-ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது.
கரோனா பரவல் எதிரொலி காரணமாக ஹாங்காங் விமானப் போக்குவரத்துத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், கரோனா அதிகரித்து வரும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான விமானச் சேவையும் இதேக் குறிப்பிட்ட காலத்தில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் விஸ்தாரா விமானத்தில் ஹாங்காங் வந்த சுமார் 50 பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் அனைத்து விமானங்களும் மே 2 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.