இஸ்லாமாபாத்: பிரான்ஸில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-லபைக் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடா்பாக பலா் கைத செய்யப்பட்டனா். இந்த நிலையில், தொ்ஹீக்-இ-லபைக் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பிரான்ஸ் தூதரை வெளியேற்றுவது தொடா்பாக நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அரசு ஒப்புக் கொண்டது.
இந்தத் தீா்மானத்தின் மீது, மீண்டும் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெறும்.