ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,
அதன்படி, புதிதாக 8,271 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 4,727,125 பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரே நாளில் 399 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 106,706 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 1,988 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுளள்னர்.
இதனிடையே, தொற்று பாதித்த 9,644 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 4,35,2,873 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.