சீனாவில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலியானார்கள்.
சீனாவின் ஜின்ஷன் மாவட்டத்தில் மின்னணு பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.