கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமான சேவைகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் இந்திய விமான சேவைகளுக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளன.