நேபாளம்: புதிய உச்சம் தொட்ட தினசரி கரோனா பலி

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நேபாளம்: புதிய உச்சம் தொட்ட தினசரி கரோனா பலி

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 3,279 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் 3,23,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 2,81,095 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 38,813 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com