வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியிருக்கிறது.
அம்மாகாண வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் ," 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயால் எரிந்தது. இது மொத்த வனப்பகுதியில் 32 சதவீதம் . வனத்தில் ஏற்பட்ட தீக்கு காரணமானவர்களைத் தேடி வருகிறோம் ' எனத் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்க | நாட்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன: நிதின் கட்கரி
பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதில் மொத்தம் 69 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 9 கட்டடங்கள் சேதாரமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
தற்போது அமெரிக்கா முழுவதும் 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் 10,435 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக 400 கட்டடங்களும் 342 வாகனங்களும் தீக்கிரையானதாக கூறப்பட்டிருக்கிறது .