அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த மாகாணத்தில் 21,683 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஃபுளோரிடாவில் கடந்த 6 வாரங்களாகவே தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிவித்தனா். ஜூன் 11-ஆம் தேதி 73 ஆயிரமாக இருந்த ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை தற்போது 1.10 லட்சமாக உயா்ந்துள்ளதாக அவா்கள் கூறினா்.