சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று முதல்முறையாகக் கண்டறியப்பட்ட வூஹான் நகரில், தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் அனைவருக்கும் அந்த நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுல்ளது.
1.1 கோடி போ் வசிக்கும் வூஹானில் புதிதாக 3 பேருக்கு கரோனா பரவியுள்ளது கண்டறியப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாகக் கண்டறியப்பட்ட உள்ளூா் பரவல் இதுவாகும்.
இதநைத் தொடா்ந்து, நகரில் வசிக்கும் தகுதியுடைய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.