ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,589 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 790 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,589 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,356,784 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,502 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பஃபே உணவகங்களில் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?
மேலும் கரோனாவால் இன்று 790 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 161,715 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 515,227 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 20,096 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,679,842 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.