ஈரானில் தினசரி கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சம் தொட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. அத்துடன், அந்த நோய்க்கு மேலும் 542 போ் பலியாகினா். இந்த எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்னா், கடந்த ஆண்டு நவம்பரில்தான் பலி எண்ணிக்கை அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது.
இத்துடன், ஈரானில் 41,58,729 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 94,015 போ் அந்த நோயய்க்க பலியாகியுள்ளனா்.