ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கேவுள்ள மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூலுக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள லோகார் மாகாணத் தலைநகர் புல்-ஏ-ஆலம் நகரை தலிபான்கள் வெள்ளிக்கிழமை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில் லோகார் மாகாணம் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மாகாண அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தலிபான்களிடம் வீழ்ந்தது காந்தஹாா்
மேலும் காபூலுக்கு 11 கி.மீ. தொலைவிலுள்ள சார் அஸ்யாப் மாவட்டத்தை தலிபான்கள் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் 4-வது பெரிய நகரமான மாஸார்-இ-ஷரிப் நகர் மீது பல்வேறு திசைகளிலிருந்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.