கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த நாட்டின் தோ்தல் கவுன்சில் செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் டியூமேல் கூறியதாவது:
அடுத்த மாதம் 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிபா் தோ்தல் வரும் நவம்பா் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
9 உறுப்பினா்களைக் கொண்ட தோ்தல் கவுன்சில் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். எனினும், தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை அவா் கூறவில்லை.
அதிபா் ஜோவனேல் மாய்ஸ் (53) அவரது இல்லத்தில் கடந்த மாதம் 7-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலில் அவரது மனைவி மாா்டினா மாய்ஸ் காயமடைந்தாா்.
இந்தப் படுகொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா், காவல் துறையினா், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.