ரஷியா: 3-ஆவது நாளாக கரோனா பலி புதிய உச்சம்

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
ரஷியா: 3-ஆவது நாளாக கரோனா பலி புதிய உச்சம்

ரஷியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 819 போ் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாவால் நாட்டில் அந்த நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பலி புதிய உச்சம் தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷியாவில் 22,144 பேருக்கு கரோனா உறுதி செய்ப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 65,79,212 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,69,683 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 58,67,890 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 5,41,639 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com