துருக்கி : கரோனா பலி எண்ணிக்கை 53,507 ஆக உயர்வு

துருக்கியில் மிக வேகமாக பரவி வரும் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 21,692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி
ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி

துருக்கியில் மிக வேகமாக பரவி வரும் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 21,692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரே நாளில்  183 பேர் வரை இறந்ததால் பலி எண்ணிக்கை 53,507 ஆக உயர்ந்திருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் 14,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

நாட்டில் கரோனா பாதித்த  61.18 லட்சம் பேரில் 56.2 லட்சம் பேர் நோயில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். 

இதுவரை 4.71 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் அதில் 3.37 கோடி பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com