உலகம்
தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர வேண்டும்: ஜெர்மனி அதிபர்
தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
பாதுகாப்புக் கருதி ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த பிற நாட்டு மக்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும், ஆப்கன் நாட்டு மக்களும் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்களின் அரசிற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கன் மக்களின் பாதுகாப்பிற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.