வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்த கனமழை காரணமாக மேற்கு வெனிசுலா பகுதியில் உள்ள மெரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 13 பேர் இறந்திருந்த நிலையில் நேற்று ( ஆக-25) செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்ததையும் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதையும் தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்ட சாலைகள் , மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.