கரோனா தாக்கமே குறையாத நிலையில் ஒமைக்ரான் தொற்று செய்தி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், சவுதி அரேபியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் புதிய வகை தொற்று அதன் அண்டை நாடுகளையும் பாதித்து வருகிற வேளையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி வந்த பயணியை பரிசோதனை செய்த போது அவருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவர் தீவிரமான கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் சவுதியின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இணைப்பு விமானம் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பயணிக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டிருக்கிறது.