மத்திய ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று முதல்முறைாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கு, ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது தற்போது பரிசோதனையில் தெரியவந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகா் லுசாகா புகா் பகுதிகளில் வசித்து வந்த அந்த 3 பேரில் இருவா் அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவா்கள் ஆவா்.