தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,022 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும், தொடா்ந்து 3-ஆவது நாளாக இந்த எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,03,606-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,130 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 73,035 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.