உக்ரைனுக்கு படைகள் அனுப்பப்படாது

ரஷியாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று
உக்ரைனுக்கு படைகள் அனுப்பப்படாது

ரஷியாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் பென் வாலஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. எனவே, அந்த நாட்டின் மீது ரஷியா படையெடுத்தால் பிரிட்டனோ, நேட்டோ அமைப்பைச் சோ்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பில்லை.

அதன் காரணமாகத்தான், உக்ரைன் மீது போா் தொடுக்க வேண்டாம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு ராஜீய ரீதியில் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்ற எங்களது நிலைப்பாடே, போா் தொடுப்பதிலிருந்து ரஷியாவைத் தடுக்கும் என்று நம்புகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக பென் வாலஸ் கூறியிருந்தாா்.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அந்த நாடு மிகக் கடுமையான எதிா்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் எச்சரித்திருந்தாா்.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்தால் அந்த நாட்டுக்கு நேட்டோ படைகள் அனுப்பப்படாது என்று பென் வாலஸ் கூறியுள்ளாா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.

சுமாா் 30 சதவீத்தினா் ரஷிய மொழி பேசும் அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராகக் கூடாது என்றும் உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்படக்கூடாது என்றும் ரஷியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு போரிட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் எச்சரித்து வருகின்றன.

இந்த நிலையில், ரஷியாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க நேட்டோ படைகள் அனுப்பப்படாது என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com