சீனா: பொது முடக்கத்தில் 1.3 கோடி போ்

சீனாவில் புதிய கரோனா பரவல் எழுச்சிகளைத் தடுப்பதற்காக, 1.3 கோடி மக்கள் வசிக்கும் ஷியன் நகரில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
சீனா: பொது முடக்கத்தில் 1.3 கோடி போ்

சீனாவில் புதிய கரோனா பரவல் எழுச்சிகளைத் தடுப்பதற்காக, 1.3 கோடி மக்கள் வசிக்கும் ஷியன் நகரில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அந்த நகரில் தீவிர பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், நகரம் முழுவதும் 211 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்த நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் முதல்முறையாக கரோனா கண்டறியப்பட்ட, 1.1 கோடி மக்கள் வசிக்கும் வூஹான் நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொதுமுடக்கம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com