மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினோ ஃபாஸோவில் மத பயங்கரவாதிகளால் 41 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாலி எல்லையையொட்டிய வாஹிகூடா அருகே வணிகா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பாக மக்கள் பாதுகாப்புப் படையினா் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.
அங்கு நடத்தப்பட்ட மீட்புப் பணிகளில் 41 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் மக்கள் பாதுகாப்புப் படையினரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.