பிரேசில்: வெள்ளப்பெருக்கால் 18 பேர் பலி, 280 பேர் காயம்

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 18 பேர் பலியானதோடு 280 பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 18 பேர் பலியானதோடு 280 பேர் காயமடைந்தனர்.

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் கடந்த செவ்வாய்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் 40 நகரங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் , அப்பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்.  280-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேரிடர் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , கனமழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அம்மாகாண ஆளுநர் ருய் கோஸ்தா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com