பிரிட்டனைச் சோ்ந்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் விமானப் பயணிகள் 200 போ் உயிா் தப்பினா்.
பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தில் சென்று கொண்டிருந்தது. 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்துக்கு மேலாக 1000 அடி உயரத்தில் பறந்த மற்றொரு விமானத்திலிருந்து பிரிட்டன் விமானத்தின் முன்புற கண்ணாடியில் பனிக்கட்டி குவியல் விழுந்தது. இதில், இரு அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியில் பலத்த விரிசல் விழுந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் காயமின்றி தப்பினா்.
கண்ணாடியில் விரிசல் விழுந்தபோதும் விமானத்தை சான் ஜோஸ் நகரில் விமானிகள் பத்திரமாக தரையிறக்கினா்.