கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகர சந்தையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தது.
அந்த நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா, தற்போது உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தீநுண்மி வௌவாலின் உடலில் இருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.
வூஹான் நகர இறைச்சி சந்தை மூலம்தான் அது பரவத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரோனா எவ்வாறு உருவானது என்பதை ஆய்வு செய்வதற்காக சீனா சென்றுள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு, அந்தச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.