பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதி கட்டுமானப் பணியில் சுமார் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தில் குவிமாடம் திடீரென இடிந்து விழுந்தது. 
இந்த சம்பவத்தில் கட்ட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருள்கள் காரணமாக கட்டடம் இடிந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com