தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை சிறுவா்களுக்குச் செலுத்தி சோதிக்க பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக, 6 முதல் 17 வயது வரையிலான 300 சிறுவா்களுக்கு அந்தப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பரிசோதனை மூலம், ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியால் சிறுவா்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா என்று ஆய்வு செய்யப்படும்.