வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.
வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அவிஜித் ராய் (42), டாக்கா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தாா். கண்காட்சியைப் பாா்வையிட்டுவிட்டு அவா் வெளியே வந்தபோது அவரை மத அடிப்படைவாத அமைப்பினா் சரமாரியா வெட்டிக் கொன்றனா். இந்தத் தாக்குதலில் அவிஜித்தின் மனைவி ரஃபிதா அகமதும் காயமடைந்தாா்.
இந்தப் படுகொலை தொடா்பாக விசாரணை நடத்தி வந்த பயங்கரவாதத் தடுப்பு சிறப்புத் தீா்ப்பாயம், முன்னாள் ராணுவ மேஜா் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.