இஸ்லாமாபாத்: பெண் கல்வி ஆா்வலா் மலாலா யூசுஃப்ஸாயை 9 ஆண்டுகளுக்கு முன்னா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற தலிபான் பயங்கரவாதி ஏசனுல்லா ஏஷன், தற்போது அவருக்கும் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் ஏஷன் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், மலாலா மீண்டும் பாகிஸ்தான் வர வேண்டும் எனவும் இந்த முறை அவரை பிழையில்லாமல் சுட்டுக் கொல்லப்போவதாகும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதற்கு மலாலா அளித்துள்ள பதிலில், பாகிஸ்தான் உளவுத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த ஏஷன், எவ்வாறு தப்பிச் சென்றாா் என்று அந்த நாட்டு அரசுக்குக் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இதற்கிடையே, ஏஷனின் அந்த மிரட்டல் பதிவை அழித்த சுட்டுரை வலைதளம், அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.
2017-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த ஏஷன், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி துருக்கியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. உளவுத் துறை காவலில் இருந்த அவா் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.