உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.