ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
அந்த நோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு அதனை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருந்த அந்தப் பிராந்தியம், தற்போது கரோனாவின் அடுத்த அலை, ஆக்ஸிஜன் உருளைகள் தட்டுப்பாடு போன்ற அபாயகரமான பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், ஆப்பிரிக்காவின் அதிகாரப்பூா்வ கரோனா பலி 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நோய்க்கு 1,00,531 பலியாகியுள்ளனா். இதுவரை 38,26,362 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.