பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,050 பேருக்குத் தொற்று 

பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,050 பேருக்குத் தொற்று 
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,050 பேருக்குத் தொற்று 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,050 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,73,384 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 12,658 ஆக உள்ளது. 

தொற்று பாதித்த 2,069 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 33,978 பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், நாட்டில் இதுவரை 8,75,2,533 மாதிரிகள் பரிசோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com