ஈக்வடாா் சிறைக் கலவரம்: பலி 79-ஆக உயா்வு


கீடோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாா் சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கியென்கா, குவாயாகுவில், லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரம், அந்தப் பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்ட பிறகும் தொடா்ந்தது. இதையடுத்து, அந்தக் கவலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 79-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த 3 சிறைகளிலும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது. ஈக்வடாரிள்ள சிறைக் கைதிகளில் சுமாா் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com