பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா; 345 பேர் பலி

பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனில் ஒரேநாளில் 8,523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,523 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,63,085ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 345 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,22,415ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை 19.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கரோனா பரவல் காரணமாக பிரிட்டனில் தற்போது 3-ஆவது கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com