உலகம்
ஆப்கனில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: 2 மாதங்களில் 6ஆவது நபர்
ஆப்கனில் இன்று மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் இன்று மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் உள்ளூர் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பிஸ்மில்லா அடில் அய்மாக். இவர் இன்று கோர் மாகாணத்தில் உள்ள தாரா இ தைமூர் கிராமத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிஸ்மில்லா அடில் அய்மாக் கோர் மாகாணத்தில் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களில் 6 பத்திரிகையாளர்கள் ஆப்கனில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.