உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.55 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,55,06,357 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 18,50,718 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,04,55,990 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,31,99,649 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,465 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,11,13,528 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,60,078 ஆக உயர்ந்துள்ளது.
2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1, 03,41,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,49,471 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,33,746 ஆக உயர்ந்துள்ளதோடு, 1,96,018-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.