சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் சாலையோரம் கிடந்த குண்டு இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
பாதுகாப்புப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.