கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா நடத்தியது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தெற்காசிய கரோனா மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாடு பெய்ஜிங்கில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்று, கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தின என்றாா் அவா்.