ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி
ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

விசாரணையில் அவர்களில் 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரிய வந்தது. அதேபோல் செவ்வாய்க்கிழமை பாக்லான் மாகாணத்தின் ஜமன்கைல் மற்றும் சாஷ்மாய் ஷேர் பகுதிகளில் நடத்தப்பட்டத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com