சீனத் தலைநகா் பெய்ஜிங்குக்கு அருகே உள்ள தியான்ஜின் நகரத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதுடன், அதில் பணியாற்றி வரும் ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா கலந்திருந்த ஐஸ் கிரீமில் பெரும்பாலானவை விற்பனையாகிவிட்டதாகவும், எனினும் அதன் மூலம் யாருக்கும் அந்த நோய் பரவியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.