பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, அந்த நாட்டின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பாகிஸ்தானின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்தத் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் மாா்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 5,19,291-ஆகவும் பலி 10,951-ஆகவும் உள்ளது.