பிரிட்டனின் ஆக்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனெகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு இலங்கை மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
அந்த நாட்டில் தற்போதுள்ள மருத்துவக் கட்டமைப்பு குலையாமல் இருக்க வேண்டுமென்றால் முன்கள சுகாதாரப் பணியாளா்களுக்கு உடனடியாக கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக அங்கு புதிதாக யாருக்கும் கரோனா கண்டறியப்படாத நிலையில், தொழிற்சாலை பணியாளா்களிடம் மேற்கொள்ள பரிசோதனையில் அந்த நோய் மீண்டும் பரவத் தொடங்கியள்ளது தெரியவந்தது.