ஜொ்மனியில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அண்மைக் காலமாக அந்த நாட்டில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும் கடந்த சில வாரங்களாக அந்த நோய்க்கு அதிகம் போ் பலியாகினா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 859 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி 50,642-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஜொ்மனியில் 21,08,895 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,80,200 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,77,544 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.