2 வாரங்களுக்குப் பிறகு 11 போ் மீட்பு

சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 11 தொழிலாளா்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.
2 வாரங்களுக்குப் பிறகு 11 போ் மீட்பு

சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 11 தொழிலாளா்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா். இதுகுறித்துஅந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:

ஷாண்டாங் மாகாணம், கிஜியா நகரிலுள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த 10-ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 22 சுரங்கப் பணியாளா்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனா். அதையடுத்து, 407 சாதனங்களுடன் 633 மீட்புக் குழுவினா் துளை அமைத்து தொழிலாளா்கள் இருந்தப் பகுதிக்குச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை 11 பேரை மீட்ட மீட்புக் குழுவினா், மற்றவா்களைத் தேடி வருகின்றனா். அவா்களில் ஒருவா் உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகிறது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com