ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை திடீர் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. காலை 11.15 மணிக்கு நடந்த இந்தத் தாக்குதலில் வாகன ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.