இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கைக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டுள்ள இந்த நேர்த்தில் இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டு பெருந்தன்மையுடன் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்து வழங்கியுள்ளது என்று கூறினார்.